









ஒரு நல்ல இரவு நேரத்தில் துபாயில் இருந்து கென்யா விமானம் மூலம் நைரோபி -
கென்யா போனோம், விமான நிலையம் நம்ம திருச்சி விமான நிலையம் போல , இல்ல இல்ல, திருவனந்தபுரம் விமான நிலையம் போல இருக்கும், ... எங்கு பார்த்தாலும் ஆப்பிரிக்கா மக்கள் !!!!!!.
எங்களை மாலை போட்டு வரவேற்றார்கள் எங்களை அழைத்த டூரிஸ்ட் ஆபிஸ் பணியாளர்கள். குடிக்க தண்ணீர் எல்லாம் வைத்து, ஐஸ் டவல் தந்து அசத்திட்டாங்க ... போற வழியிலேயே , எங்க போக போறோம், இந்த வண்டியிலேயே போக போறோம், பிரேக் பாஸ்டுக்கு நிறுத்தி உடனே ஐந்து மணி நேர வேன் பயணம், அதில் கடைசி இரண்டு மணி நேரம் ரோடு கிடையாது ..என்று சொல்லிவிட்டு கூட வந்த பெண் இறங்கி விட்டாள் . இனி டிரைவர் , கைடு எல்லாமே அந்த ஒரு ஆள் தான் .
கென்யாவின் தலை நகர் நைரோபி, நம்ம சென்னை மாதிரி இருக்குன்னு சொல்லலாம், கொஞ்சம் பெரிய கட்டிடங்கள், ஓரளவுக்கு நல்ல சாலை , சிக்னல் , ஒரு ரயில்வே ஸ்டேஷன் கூட பார்த்தோம், சாலையில் வண்டிகள் எல்லாம் பயங்கர பழசு , துபாயில் வண்டிகளை பார்த்த பிறகு, லண்டன் ல ஓடுற வண்டி கூட பழசு மாத்ரி தெரியும் . போற வழியில் ஒரு பெரிய ஸ்லம்மை கடந்து போனோம், ஒரே மக்கள் கூட்டம், நிறைய கடைகள், பெட்டி கடைகள், பிளாட்பாரம் கடைகள் , காய்கறி, பழம் , மாட்டு இறைச்சி, ... எதோ நம் ஊரை பார்ப்பது போலேவே இருந்தது
போகிற வழியில் ஒரு கால்ப் கோர்ஸ் கூட பார்த்தேன் . ஒரு சில பங்களாக்கள் , நல்ல வீடுகள், பெரும்பாலும் மிகவும் சாதரண கடை, வீடு , ஏழை மக்கள். அப்பப்ப குழைந்தைகள் சீருடையில் , ஆனால் பெரிய காலேஜ் அல்லது பிரம்மாண்டமான ஸ்கூல் பார்க்கவே இல்லை, அது உள் பக்கமாக இருக்கலாம் , என் கண்ணில் படவில்லை ...
போகிற வழியில் ஒரு பெரிய மலை உச்சியில் நிறுத்தினார் எங்கள் டிரைவர். அங்கிருந்து ரொம்ப தொலை தூரம் வரை நன்றாக தெரிகிறது, டிரைவர் சொன்னது அங்கிருந்து ஜோர்டான் தெரியும் என்று..அவர் ஏதோ அளந்து விடுகிறார் என முடிவு செய்து பார்த்தேன், நிறய தூரம் தெரிந்தது ... நடுவில் ஊரோ, கட்டிடமோ ஒன்றும் கிடையாது ..
அவர்கள் சொன்ன நல்ல சாலையும் அவ்வளவு நன்றாக இல்லை, ரொம்ப மோசம் தான் இருந்தாலும் இரவில் பிரயாணம் செய்த களைப்பால், வண்டியின் குலுங்களுக்கு தூங்க முயற்ச்சித்து, ஓரளவுக்கு தூங்கினேன், கொஞ்ச நேரத்தில் சாலை முடிந்தது, இப்பொழுது சாதரண மண் சாலை தான், போகும் வழியிலேயே நிறைய மாடுகள் கூட்டத்தை பார்க்க முடிந்தது , திடீரென ஒரு வரி குதிரை கூட்டத்தை பார்த்தவுடன் வண்டியில் எல்லாரும் பரவசமானோம், டிரைவர் ஒரு நமட்டு சிரிப்பை உதிர்த்தார், அதன் அர்த்தம் அப்போது புரியவில்லை.
ஒரு மணி நேரம் சாலை இல்லா மண் வழியில் பயணித்த பிறகு, ஒரு இடத்தை அடித்தோம், அது தான் மசாய் மாரா . அங்கிருந்து ஒரு அரை மணி நேர சாலை இல்லா காட்டில் பயணம் செய்து , நடு காட்டில், உள்ள ஒரு மாறாஸிம்ஹா என்ற ஒரு ரிசார்ட்க்கு போனோம்.
ஏறியவுடன், எல்லாருக்கும் குளிர் பானம், நேர எங்கள் அறைக்கு சென்றவுடன் , நாலு மணிக்கு தயாராய் இருக்கவும் என்று டிரைவர் சொல்லிவிட்டு போனார். அந்த ரிசார்ட் ரொம்ப நல்லா இருந்தது, நிறைய மரங்கள் - தரைக்கு, தூணுக்கு, சுற்றிலும் நிறைய மரங்கள், செடிகள் பக்கத்ல எந்த கட்டிடமும் கிடையாது, எந்த ஊரும் கிடையாது, கடை கிடையாது, டெலிபோன் கம்பம் கிடையாது , மின்சார கம்பம் கிடையாது. அத்வான காடு என்ற சொல்லுக்கு சரியான பதம், தீடீரென்று காத்து சத்தம் நன்றாக கேட்கிறது. அங்கு சத்தமே கிடையாது.
விமனாதில் தூங்காமல் வந்தது , அந்த ஆறு மணி நேர சாலை பயணம் அவ்வளவு சுகம் இல்லை, நன்றி சாலைக்கு !!!!, ..எல்லாம் சேர்த்து முதலில் எப்படா ரிசார்ட் போய் சேருவோம் என்றிருந்தது .... அதனால், அந்த மசாய் மாரா என்ற அந்த காட்டை வரும் பொழுது சரியாக பார்க்க வில்லை ... இப்போ நான்கு மணிக்கு ரெடியா இருங்க, என்று டிரைவர் சொல்லி விட்டார்.
நான்கு மணிக்கு காமிரா சகிதம் கிளம்பி விட்டோம் ..அந்த டயோட்டா வேனில் , கூரையை மாற்றி ..சற்று மேல் தூக்கி வைக்க முடியும், அப்பொழுது , நாம் வேனில் நின்று கொண்டு பயணம் செய்தால் , நாலா பக்கமும் நல்ல வீயூ. ... நன்கு பரந்து விரிந்த காடு, ஆனால் நிறைய மரங்கள் கிடையாது... ரெண்டு அல்லது மூன்று அடி உயரம் இல்ல புல், சில இடங்களில் மரங்கள் ... வீடு கிடையாது, ரோடு கிடையாது, கடை கிடையாது, டெலிபோன் / மின்சார கம்பங்கள் கிடையாது .... மனதில் மெதுவாக அந்த இடத்தின் அழகு ஆக்கிரமிக்க தொடங்கியது ..
போகும் வழியில் முரட்டு காட்டு எருமையை பார்த்தோம் ... ரொம்ப ஜாக்ரதையா இருக்குனும் என்று டிரைவர் சொன்னார், வண்டியை நெம்பி தள்ளி விடுமாம் ... கொஞ்ச நேரம் வண்டியை ஓட்டிய பிறகு, டிரைவர் வயர்லஸ் மூலம், எதோ செய்தி வந்தது ..அவரும் உடனே வண்டியை வேகமாக செலுத்தினார் ..அங்கு போனால், நிஜ சிங்க கூட்டம், ஒரு பெண் சிங்கம் படுத்து கிடந்தது... ஆண் சிங்கம் அங்கும் இங்கும் நடந்து ..சில சமயங்களில் பெரிய சத்தத்தை கொடுத்து..எங்களை போலவே இன்னும் ஒரு நான்கு வேன்கள் அங்கு இருந்தது.. எல்லாரும் அமைதியாய் காமிராவில் சுட்டு கொண்டிருந்தனர் ... தீடீரென்று அந்த ஆண் சிங்கம், பெண் சிங்கம் மேல் பாய்ந்து ... தன தாகத்தை தனித்தது... எங்கள் வேனில் இருந்த சிறுவர்கள் சிரித்த பொழுது, டிரைவர் சத்தம் போட வேண்டாம் என்று சொன்னார் ... திரும்பும் பொழுது, அந்த பரந்து விரிந்த காடு, மாலை நேரத்து மஞ்சள் வெயில், தூர தெரியும் மலை, அலைந்து திரியும் மேக கூட்டங்கள்... அந்த அமைதி, சத்தமில்லா அந்த அமைதி ... அதற்க்கு கூட ஒரு சத்தம் உண்டு என்று அறிந்த சமயம் அது....
இரவு நேரத்தில் சாதரணமாக எல்லாரும் ரீசார்ட்டுக்கு திரும்பி விடுவார்கள் ... நல்ல உணவு, பக்கத்தில் உள்ள மலை வாழ் / காடு வாழ் மக்களின் நடனம் என்று கழிந்தது ...காலையில் ஆறு மணிக்கே ரெடியாக இருங்கள் என்று சொல்லிவிட்டார்
காலையில் ரெடியாக இருந்தோம் ... காலை நேரம் மிருகங்களை பார்ப்பதற்கு மிகவும் உகந்த நேரம் - அது உணவுக்காக வெளியில் வந்து திரியும் நேரம் - கூரையை உயர்த்திய வண்டி - நாலா பக்கமும் நல்ல வீயூ - கண்ணுக்கெட்டிய தூரம் வரை மனித சஞ்சாரமே கிடையாது, சாலை இல்லை, கடை கிடையாது, கட்டிடங்கள் கிடையாது, போஸ்டர் கிடையாது .... நிறைய மரங்களும் இல்லாததால், நிறைய தூரம் பார்க்க முடியும், அலை பாயும் மேகங்கள், தூர தெரியும் மலைகளின் இடையே ஓடிபிடித்து விளையாடும் கதிரவன்.... வித விதமான மான், நிறைய மான் குட்டிகள், வண்டியை அந்த இடத்தில நிறுத்தி இன்ஜினை நிறுத்தியவுடன்,
...ஆஹா அந்த அமைதி - அந்த மௌனத்தற்கு கூட ஒரு சத்தம் உண்டு, மொழி உண்டு, மௌனம் பேசியது - அதை கேட்க்க முடிந்தது, அதற்க்கு வாசம் கூட இருந்தது, அது மூளையை பை பாஸ் செய்து விட்டு நேராக இதயத்துடன் உரையாடியது... அது ஒரு சுகானுபவம் .ஒரு நாள் வேகமாக ஒரு மரத்தின் அடியில் பார்க்க வேகமாக ஓடினோம் ... வண்டியில் தான் ( வண்டியை விட்டு வெளியில் வர நினைக்க கூட முடியாது )... அப்பா, அந்த சிறுத்தையின் பார்வை, நடையின் ஒரு அலட்ச்சியம்... கண் இமைக்கும் நேரத்தில் மரத்தின் மேலே... அது மாலை நேரம் என்பதால் கொஞ்சம் தொலை தூரத்தில் அந்த காளை/ குதிரை போல் உள்ள wild beast கூட்டம் கூட்டமாக.... சிறுத்தை மெதுவாக அடி மேல் அடி வைத்து ஒரு பாறையின் பின், .... அதுக்கு அப்பறம், அது ஒரு ஓட்டம் ஓடியது பாருங்க ... தொலை தூரத்தை, நொடி பொழுதில் அடைந்துருக்கும், அவ்வளவு தூரம் உடனே எங்களால் வண்டியில் போக முடியாது
அங்கிருந்து போகும் வழியில் ஒரு சிங்கத்தின் மூன்று குட்டிகளை பார்த்தோம், டிரைவர் சொன்னது, சிங்கம் குட்டிகள் கூட இருக்கும் பொழுது ரொம்ப ஜாக்கிரதையாக இருக்கணும் ... பக்கத்தில் போக கூடாது என்றார். எனவே அங்கிருந்து வேற இடத்துக்கு போனோம், ...போகும் வழியில் ரெண்டு ஒட்டக சிவிங்கி சாலையில்... மெதுவாக அது முள் செடி பக்கம் நகர்ந்து, பெரிய பெரிய முள் உள்ள ( நம்ப ஊர் காகா முள்ன்னு சொல்வாங்க ..வெள்ளையா ரெண்டு மூணு அங்குலம் இருக்கும் ) .. மரத்தில் உள்ள இல்லையை அழகாக சாப்பிட்டது ... அந்த ஒட்டக சிவிங்கி நல்ல உயரம் , நல்ல நிறம் , நல்ல டிசைன் ... சில மணி துளிகளில் வரி குதிரை கூட்டம், அதன் அழகு சொல்ல முடியாது..என்ன ஒரு வரிகள், வெள்ளையும், கருப்பும் - பகலும் இரவும் போல ...
சில நிமிடங்களில் .. குதிரையும் இல்லாமல், காளையும் இல்லாமல் ..ஒரு படைப்பு..அது ஆயர கணக்கில் ... கூட்டம் கூட்டமாக மேய்ந்து கொண்டிருக்கும். மரம் உள்ள இடங்களுக்கு போகும் பொழுது ஆப்ப்ரிகா யானை(களை) பார்த்தோம், ஆஹா நம்ம கணபதி இங்க கூட இருக்காரே ... காது சற்று இல்லே ரொம்ப பெரியது. டிரைவர் எப்போதுமே யானைக்கு அருகில் செல்வதில்லை குறைந்தது ஒரு 20 /30 அடி இருக்கும். ஆனால் சிங்கம் அருகில் ஒரு சில அடிகள் கூட இருக்காது, அவ்வளவு கிட்ட போகலாம். வழியில் ஒரு பெரிய பறவையை பார்த்தோம் அதன் எடை ஒரு 15/20 இருக்கலாம் என்றார் ..அது பறப்பது அதிசயம் தான் ... போகிற வழியில் பெரிய வான் கோழிகள்,
வித விதமான மான்கள், புள்ளி மான், ஒரு மாதிரி மின்னும் ( brownish /golden ) மான்,
மரங்கள் உள்ள இடத்தில் அழகான பறவைகள் ...எல்லா மிருகங்களும் அருகருகில் , அது அது அதன் குடும்பத்துடன் !!!!... இந்த சிங்கம் /சிறுத்தை மட்டும் வேட்டையாடி சாப்பிடும் ... அதனால் நரி கூட்டமும் உண்டு , யப்பா இந்த நரி போடும் சத்தம் இருக்கிறதே, ஒரு மாதிரி இருக்கும். .... அங்குள்ள ஒரு ஆறு போன்ற இடத்தில் நீர்யானை, முதலை ..எல்லாம் அந்த காட்டில், இது போன்ற ஒரு மிருகம் வசிக்கும் இடம் உலகத்தில் வேறு எங்கும் இல்லை என சொல்லலாம் ( டான்செனியா , சவுத் ஆப்ரிக்கா , போன்ற வேறு நாடுகளிலும் இது மாதிரி இடங்கள் உண்டு என்று கேள்வி ) ..
ஒரு நாள் காலை மசாய் மக்கள் வாழும் ஒரு குடிசை வாழ் இடத்திற்கு போனோம், முள்ளை பரப்பி வேலி அமைத்து, அதற்குள் நிறைய குடிசை, உயரமான ஆட்கள், சிவப்பு கம்பளி தான் சுற்றி இருப்பார்கள் , தூரத்தில் இருந்தே அடையாளம் தெரிவதற்கு. அவர்களின் சொத்து மாடுகள் தான், அது தான் கொடுக்கல் வாங்கல் எல்லாம், மாடுகளின் கழுத்தில் ரத்தத்தை எடுத்து பாலுடன் சேர்த்து சாப்பிடுவார்கள் ... வீட்டில் பழைய புகை அடுப்பு தான், சோளத்தில் இருந்து எடுத்த மாவில் ஒரு வித கஞ்சி செய்து உண்கிறார்கள் ... மிகவும் கஷ்டம், ஒரு சாதரண அடிப்படை வசதி கூட கிடையாது... ஆண்கள் எப்போதும் ஒரு வித எலும்பு வைத்திருக்கிறார்கள் ..கை தடி மாதிரி . அவர்களை பார்த்தது ஒரு வித விதயாசமான அனுபவம்
அந்த ரீசார்டை நடத்துபவர் ...ஒரு இந்தியர் தான்னு சொன்னாங்க - நைரோபியில் நிறய இந்தியர் இருப்பதாக கேள்வி , நாங்க மசாய் மாறா மட்டும் பார்த்து விட்டு திரும்பி விட்டோம் - ரிசார்ட்டில் சைவ உணவு கிடைக்கும், ரொட்டி கிடைக்கும். பெரிய பெரிய பணக்காரர்கள் அல்லது இஸ்ரேலில் இருந்து வரும் டூரிஸ்ட்டுகள், பெரும்பாலும் அமெரிக்கர்கள் அல்லது ஐரோப்பியர்கள் தான் வருகிறார்கள்
நான் ஓரளவுக்கு ஊர்கள் ( நாடுகள் ) பார்த்திருக்கிறேன் ... அனால் இந்த பயணம் எப்போதும் மனதை விட்டு அகலாது - மகள் வந்த பிறகு, அவளையும் அழைத்து கொண்டு போனது இன்னமும் சுவாரசியம், இனியும் வாய்ப்பு வந்தால் போக வேண்டும் ..
துபாயில் இருந்து போய் வருவதற்கு அவ்வளவு சிரமம் இல்லை , விமான கட்டணமும் சேர்த்து ஒரு ஆளுக்கு 3000 dirham ஆகலாம். அமேரிக்கா மற்றும் தூர தேச ஆட்கள், இந்தியா வரும் பொழுது நடுவில் ஒரு நாலு நாள் தங்கி இந்த இடத்தை பார்க்கலாம். ...