சனி, 10 அக்டோபர், 2009

என் ஸ்வீட் , காரம் & காபி

எல்லாரும் அவியல் / பஞ்சாமிர்தம் / கலக்கல் / கஞ்சி/.சான்ட் விச் ... இப்படியெல்லாம் எழுதுவது போல் நான் எழுத வந்தது SKC அதாவது ஸ்வீட் , காரம் , காபி, ... எங்க ஊர்ல , அதாவது திருச்சி BHEL , கைலாசபுரத்தில் ....அங்க வேலை பார்கற தொழிலாளி எல்லாம் ஒரு தீபெட்டியை சுண்டி அது விழும் பக்கத்தை வைத்து காசு வைத்து விளையாடுவார்கள் ... அதுல ஜெய்ச்சா SKC ... அது ... கடலை மிட்டாய் , முறுக்கு, டீ... ( ஆறு காசு )

BHEL லில் NMR வேலை என்றால் ரொம்ப பெரிய வேலை என்று நினைத்த காலம், காலனிகு உள் வரும் மாடுகளை எல்லாம் வெரட்டனும் . அந்த NMR வேலை கிடைக்கனமேன்னு வேண்டாத கடவுள் இல்லை... விதி வலியது, எங்கெங்கேயோ கூட்டி கொண்டு போய் இப்போ இங்க... ( ரொம்ப நாட்களுக்கு முன் ஒரு பதிவில், சே படிக்காமல் இருந்திருந்தால் ... இப்படி வேலை, பணம், அலைச்சல் , பிரஷர்...இது ஒன்றுமே வந்திருக்காது. ..ரொம்ப சரியான வார்த்தை - என்ன சொல்றீங்க !!!!!)

இனி என் ஸ்வீட் , காரம் & காபி

சமீபத்ல ரொம்பவும் . மனது கஷ்டப்பட்ட நியூஸ் , தேக்கடி படகு விபத்து . கொஞ்ச நாட்களுக்கு முன் அங்கு சுற்றுலா போன என் மாமா பையன், அதே படகு சவாரிக்கு போக ஆசைப்பட்டு, டிக்கெட் ட்ரை பண்ணினான் ஆனால் ..அங்கு ஒரு பெரிய மாபியா இருக்கு , காலை 5 மணிக்கு டிக்கெட் வாங்க போனால் கூட , நாலைந்து பேருக்கு டிக்கெட் கொடுத்து விட்டு டிக்கெட் இல்லை என்று சொன்னார்கள், என் மாமா பையன் விட வில்லை, இரண்டு நாள் பார்த்து விட்டு , மூன்றாவது நாள் பெரிய சண்டை போட்டான் ( சத்தம் ) ... யாரும் உதவிக்கு வர வில்லை ..கிட்ட தட்ட அந்த கும்பல் அவனை ஏளனம் செய்து அடிக்க வந்தார்கள் அவன் அந்த படகு பயணம் போகாமலே திரும்பி வந்து விட்டான் ... ஏன் என்றால் அத்தனை டிகட்டும் ப்ளாக்கில் .... அதற்க்கு அங்கு உள்ள அதிகாரிகள் , போலீஸ், ஏஜென்ட் எல்லாரும் உடந்தை. நான் போய் இருந்தால் கூட ப்ளாக்கில் வாங்கிருப்பேன்.... அதை நினைத்தால் மனம் கூசுகிறது. இப்படி ப்ளாக்கில் பணம் செய்றவங்க எங்க படகின் பாதுகாப்பை பத்தி யோசிச்சிருப்பாங்க ..சான்சே இல்லை ..கம்யுனிசம் ஒன்றும் கரை படியாத கட்சி இல்லை, நம்ப கரை வேட்டி போல அங்க பூந்து விளையாடறாங்க.


அப்படி நிறைய பேர் வாங்காமல் இருந்தால்/ இருந்திருந்தால் , நிறய பேரை படகுல ஏத்திருக்க மாட்டாங்க, அந்த லைப் ஜாக்கெட் கிழே எங்கோ பிரிக்கப்படாமல் இருந்திருக்காது , அதன் சூபர்வைசரோ அல்லது மானேஜர்.. அதை எப்படி யூஸ் செய்யணும் என்று விவரித்திருப்பார்கள் ...அந்த படகு மூழ்கி இருந்தாலும், அதை ஓட்டிய டிரைவர் / மற்றும் இதர பணியாளர்கள் நீச்சல் தெரிந்த மற்றும் பலர் , பத்து உயிர்களை காப்பாற்றினார்கள் என்று செய்தி வந்திருக்கலாம் ...சின்ன ப்ளாக்ல டிக்கெட்டு என்னவெலாம் செய்கிறது பார்த்தீர்களா???



உன்னை போல் ஒருவனும் பார்க்கலை, புதன் கிழமையும் பார்க்லே, அனால் அந்த விஜய் டிவி , கமல் ப்ரோக்ராம் பார்த்தேன், ... தீவிரவாதத்துக்கு தீவரவாதம் தான் தீர்வுன்னு கிடையாது, உரையாடல் வேண்டும் , பேச்சு வார்த்தை வேண்டும், என்று ரொம்ப க்ளியராவே சொன்னார். ... ஆனால் இந்த செக்யூலியர் பதிவர் மற்றும் பின்னூட்ட இடுபவர்கள் தொல்லை தாங்க முடியலே ... எல்லார்க்குமே தெரியும் இந்த கதை இது தான் என்று ... ஒரு வேளை, கதையிலே அந்த குஜராத் கரசேவர்கள் எல்லாம் கோத்ராவில் தானே தன் வண்டிக்கு தீ வைத்து பழியை வேறு பக்கம் போட்டு சதி செய்தார்கள் என்று சொல்லி இருக்கலாமோ ?? நன்றி லல்லு பிரசாத் யாதவ் ன்னு ஒரு கார்டு போட வேண்டிஇருக்கும் !!!!!



இப்போ இது சுற்றுலா சீசன் - துபாய்க்கு வெகு அருகில் ஆனால் ஓமான் நாட்டில் முசுந்தம் அப்படின்னு ஒரு இடம் இருக்கு, துபாய் லேந்து ஷார்ஜா போய் - ராசல் கேமா போய் அங்க ஒரு Barder செக் போஸ்ட் இருக்கு , அங்கிருந்து ஒரு அரை மணி நேர பயணம், பாதை மிக மிக ரம்யமாக இருக்கும் ஒரு பக்கம் வளைந்து செல்லும் பாதை, மறு பக்கம் நீல / பச்சை வண்ணத்தில் கடல் . முசுந்தம் ஒரு சின்ன ஊர் , கிராமம் போல இருக்கும், காலைல படகுல ஏறினா சாயங்காலம் கொண்டு வந்து விடுவாங்க , சாப்பாடும் கிடைக்கும் படகுல, அந்த படகு பயணம் ரொம்ப நல்லா இருக்கும், நிறைய மலைகள், வளைந்து வளைந்து செல்லும் மலைகள், அதன் நடுவே கடல், ரோடு வீடு, ஒன்னும் கிடையாது , கொஞ்சம் உள்ள போனவுடனே போட்டை நிறுத்தி, யாருக்கு வேண்டுமோ / தெகிரியம் இருக்கோ அவர்கள் கடலில் குதித்து மகிழலாம்.

அப்படி நான் செஞ்ச ஒரு குனஸ்ட்டை....




ஒரு பக்கம் வளைந்து செல்லும் பாதை, மறு பக்கம் நீல / பச்சை வன்னந்தில் கடல் ... முசுந்தம் ஒரு சின்ன ஊர் , கிராமம் போல இருக்கும், காலைல படகுல ஏறினா சாயங்காலம் கொண்டு வந்து விடுவாங்க ... சாப்பாடும் கிடைக்கும் படகுல,.அந்த படகு பயணம் ரொம்ப நல்லா இருக்கும், .... நிறைய மலைகள், வளைந்து வளைந்து செல்லும் மலைகள், அதன் நடுவே கடல், ரோடு வீடு, ஒன்னும் கிடையாது ... கொஞ்சம் உள்ள போனவுடனே போட்டை நிறுத்தி ... யாருக்கு வேண்டுமோ . தெகிரியம் இருக்கோ அவர்கள் கடலில் குதித்து மகிழலாம். துபாயில் இருந்து போய் வருவது மிக எளிது . வேண்டுமானால் ஒரு நாளில் போய் திரும்பி வரலாம் ..இல்லை, அங்கே தங்கலாம் , ஹோட்டல்கள் உண்டு

இங்க போடோ எல்லாம் பார்க்கலாம்











வெள்ளி, 11 செப்டம்பர், 2009

மறக்க முடியாத மசாய்மாறா - கென்யா











 
Posted by Picasa




ஒரு நல்ல இரவு நேரத்தில் துபாயில் இருந்து கென்யா விமானம் மூலம் நைரோபி -
கென்யா போனோம், விமான நிலையம் நம்ம திருச்சி விமான நிலையம் போல , இல்ல இல்ல, திருவனந்தபுரம் விமான நிலையம் போல இருக்கும், ... எங்கு பார்த்தாலும் ஆப்பிரிக்கா மக்கள் !!!!!!.

எங்களை மாலை போட்டு வரவேற்றார்கள் எங்களை அழைத்த டூரிஸ்ட் ஆபிஸ் பணியாளர்கள். குடிக்க தண்ணீர் எல்லாம் வைத்து, ஐஸ் டவல் தந்து அசத்திட்டாங்க ... போற வழியிலேயே , எங்க போக போறோம், இந்த வண்டியிலேயே போக போறோம், பிரேக் பாஸ்டுக்கு நிறுத்தி உடனே ஐந்து மணி நேர வேன் பயணம், அதில் கடைசி இரண்டு மணி நேரம் ரோடு கிடையாது ..என்று சொல்லிவிட்டு கூட வந்த பெண் இறங்கி விட்டாள் . இனி டிரைவர் , கைடு எல்லாமே அந்த ஒரு ஆள் தான் .

கென்யாவின் தலை நகர் நைரோபி, நம்ம சென்னை மாதிரி இருக்குன்னு சொல்லலாம், கொஞ்சம் பெரிய கட்டிடங்கள், ஓரளவுக்கு நல்ல சாலை , சிக்னல் , ஒரு ரயில்வே ஸ்டேஷன் கூட பார்த்தோம், சாலையில் வண்டிகள் எல்லாம் பயங்கர பழசு , துபாயில் வண்டிகளை பார்த்த பிறகு, லண்டன் ல ஓடுற வண்டி கூட பழசு மாத்ரி தெரியும் . போற வழியில் ஒரு பெரிய ஸ்லம்மை கடந்து போனோம், ஒரே மக்கள் கூட்டம், நிறைய கடைகள், பெட்டி கடைகள், பிளாட்பாரம் கடைகள் , காய்கறி, பழம் , மாட்டு இறைச்சி, ... எதோ நம் ஊரை பார்ப்பது போலேவே இருந்தது

போகிற வழியில் ஒரு கால்ப் கோர்ஸ் கூட பார்த்தேன் . ஒரு சில பங்களாக்கள் , நல்ல வீடுகள், பெரும்பாலும் மிகவும் சாதரண கடை, வீடு , ஏழை மக்கள். அப்பப்ப குழைந்தைகள் சீருடையில் , ஆனால் பெரிய காலேஜ் அல்லது பிரம்மாண்டமான ஸ்கூல் பார்க்கவே இல்லை, அது உள் பக்கமாக இருக்கலாம் , என் கண்ணில் படவில்லை ...

போகிற வழியில் ஒரு பெரிய மலை உச்சியில் நிறுத்தினார் எங்கள் டிரைவர். அங்கிருந்து ரொம்ப தொலை தூரம் வரை நன்றாக தெரிகிறது, டிரைவர் சொன்னது அங்கிருந்து ஜோர்டான் தெரியும் என்று..அவர் ஏதோ அளந்து விடுகிறார் என முடிவு செய்து பார்த்தேன், நிறய தூரம் தெரிந்தது ... நடுவில் ஊரோ, கட்டிடமோ ஒன்றும் கிடையாது ..

அவர்கள் சொன்ன நல்ல சாலையும் அவ்வளவு நன்றாக இல்லை, ரொம்ப மோசம் தான் இருந்தாலும் இரவில் பிரயாணம் செய்த களைப்பால், வண்டியின் குலுங்களுக்கு தூங்க முயற்ச்சித்து, ஓரளவுக்கு தூங்கினேன், கொஞ்ச நேரத்தில் சாலை முடிந்தது, இப்பொழுது சாதரண மண் சாலை தான், போகும் வழியிலேயே நிறைய மாடுகள் கூட்டத்தை பார்க்க முடிந்தது , திடீரென ஒரு வரி குதிரை கூட்டத்தை பார்த்தவுடன் வண்டியில் எல்லாரும் பரவசமானோம், டிரைவர் ஒரு நமட்டு சிரிப்பை உதிர்த்தார், அதன் அர்த்தம் அப்போது புரியவில்லை.

ஒரு மணி நேரம் சாலை இல்லா மண் வழியில் பயணித்த பிறகு, ஒரு இடத்தை அடித்தோம், அது தான் மசாய் மாரா . அங்கிருந்து ஒரு அரை மணி நேர சாலை இல்லா காட்டில் பயணம் செய்து , நடு காட்டில், உள்ள ஒரு மாறாஸிம்ஹா என்ற ஒரு ரிசார்ட்க்கு போனோம்.



ஏறியவுடன், எல்லாருக்கும் குளிர் பானம், நேர எங்கள் அறைக்கு சென்றவுடன் , நாலு மணிக்கு தயாராய் இருக்கவும் என்று டிரைவர் சொல்லிவிட்டு போனார். அந்த ரிசார்ட் ரொம்ப நல்லா இருந்தது, நிறைய மரங்கள் - தரைக்கு, தூணுக்கு, சுற்றிலும் நிறைய மரங்கள், செடிகள் பக்கத்ல எந்த கட்டிடமும் கிடையாது, எந்த ஊரும் கிடையாது, கடை கிடையாது, டெலிபோன் கம்பம் கிடையாது , மின்சார கம்பம் கிடையாது. அத்வான காடு என்ற சொல்லுக்கு சரியான பதம், தீடீரென்று காத்து சத்தம் நன்றாக கேட்கிறது. அங்கு சத்தமே கிடையாது.

விமனாதில் தூங்காமல் வந்தது , அந்த ஆறு மணி நேர சாலை பயணம் அவ்வளவு சுகம் இல்லை, நன்றி சாலைக்கு !!!!, ..எல்லாம் சேர்த்து முதலில் எப்படா ரிசார்ட் போய் சேருவோம் என்றிருந்தது .... அதனால், அந்த மசாய் மாரா என்ற அந்த காட்டை வரும் பொழுது சரியாக பார்க்க வில்லை ... இப்போ நான்கு மணிக்கு ரெடியா இருங்க, என்று டிரைவர் சொல்லி விட்டார்.

நான்கு மணிக்கு காமிரா சகிதம் கிளம்பி விட்டோம் ..அந்த டயோட்டா வேனில் , கூரையை மாற்றி ..சற்று மேல் தூக்கி வைக்க முடியும், அப்பொழுது , நாம் வேனில் நின்று கொண்டு பயணம் செய்தால் , நாலா பக்கமும் நல்ல வீயூ. ... நன்கு பரந்து விரிந்த காடு, ஆனால் நிறைய மரங்கள் கிடையாது... ரெண்டு அல்லது மூன்று அடி உயரம் இல்ல புல், சில இடங்களில் மரங்கள் ... வீடு கிடையாது, ரோடு கிடையாது, கடை கிடையாது, டெலிபோன் / மின்சார கம்பங்கள் கிடையாது .... மனதில் மெதுவாக அந்த இடத்தின் அழகு ஆக்கிரமிக்க தொடங்கியது ..

போகும் வழியில் முரட்டு காட்டு எருமையை பார்த்தோம் ... ரொம்ப ஜாக்ரதையா இருக்குனும் என்று டிரைவர் சொன்னார், வண்டியை நெம்பி தள்ளி விடுமாம் ... கொஞ்ச நேரம் வண்டியை ஓட்டிய பிறகு, டிரைவர் வயர்லஸ் மூலம், எதோ செய்தி வந்தது ..அவரும் உடனே வண்டியை வேகமாக செலுத்தினார் ..அங்கு போனால், நிஜ சிங்க கூட்டம், ஒரு பெண் சிங்கம் படுத்து கிடந்தது... ஆண் சிங்கம் அங்கும் இங்கும் நடந்து ..சில சமயங்களில் பெரிய சத்தத்தை கொடுத்து..எங்களை போலவே இன்னும் ஒரு நான்கு வேன்கள் அங்கு இருந்தது.. எல்லாரும் அமைதியாய் காமிராவில் சுட்டு கொண்டிருந்தனர் ... தீடீரென்று அந்த ஆண் சிங்கம், பெண் சிங்கம் மேல் பாய்ந்து ... தன தாகத்தை தனித்தது... எங்கள் வேனில் இருந்த சிறுவர்கள் சிரித்த பொழுது, டிரைவர் சத்தம் போட வேண்டாம் என்று சொன்னார் ... திரும்பும் பொழுது, அந்த பரந்து விரிந்த காடு, மாலை நேரத்து மஞ்சள் வெயில், தூர தெரியும் மலை, அலைந்து திரியும் மேக கூட்டங்கள்... அந்த அமைதி, சத்தமில்லா அந்த அமைதி ... அதற்க்கு கூட ஒரு சத்தம் உண்டு என்று அறிந்த சமயம் அது....

இரவு நேரத்தில் சாதரணமாக எல்லாரும் ரீசார்ட்டுக்கு திரும்பி விடுவார்கள் ... நல்ல உணவு, பக்கத்தில் உள்ள மலை வாழ் / காடு வாழ் மக்களின் நடனம் என்று கழிந்தது ...காலையில் ஆறு மணிக்கே ரெடியாக இருங்கள் என்று சொல்லிவிட்டார்

காலையில் ரெடியாக இருந்தோம் ... காலை நேரம் மிருகங்களை பார்ப்பதற்கு மிகவும் உகந்த நேரம் - அது உணவுக்காக வெளியில் வந்து திரியும் நேரம் - கூரையை உயர்த்திய வண்டி - நாலா பக்கமும் நல்ல வீயூ - கண்ணுக்கெட்டிய தூரம் வரை மனித சஞ்சாரமே கிடையாது, சாலை இல்லை, கடை கிடையாது, கட்டிடங்கள் கிடையாது, போஸ்டர் கிடையாது .... நிறைய மரங்களும் இல்லாததால், நிறைய தூரம் பார்க்க முடியும், அலை பாயும் மேகங்கள், தூர தெரியும் மலைகளின் இடையே ஓடிபிடித்து விளையாடும் கதிரவன்.... வித விதமான மான், நிறைய மான் குட்டிகள், வண்டியை அந்த இடத்தில நிறுத்தி இன்ஜினை நிறுத்தியவுடன், ...ஆஹா அந்த அமைதி - அந்த மௌனத்தற்கு கூட ஒரு சத்தம் உண்டு, மொழி உண்டு, மௌனம் பேசியது - அதை கேட்க்க முடிந்தது, அதற்க்கு வாசம் கூட இருந்தது, அது மூளையை பை பாஸ் செய்து விட்டு நேராக இதயத்துடன் உரையாடியது... அது ஒரு சுகானுபவம் .


ஒரு நாள் வேகமாக ஒரு மரத்தின் அடியில் பார்க்க வேகமாக ஓடினோம் ... வண்டியில் தான் ( வண்டியை விட்டு வெளியில் வர நினைக்க கூட முடியாது )... அப்பா, அந்த சிறுத்தையின் பார்வை, நடையின் ஒரு அலட்ச்சியம்... கண் இமைக்கும் நேரத்தில் மரத்தின் மேலே... அது மாலை நேரம் என்பதால் கொஞ்சம் தொலை தூரத்தில் அந்த காளை/ குதிரை போல் உள்ள wild beast கூட்டம் கூட்டமாக.... சிறுத்தை மெதுவாக அடி மேல் அடி வைத்து ஒரு பாறையின் பின், .... அதுக்கு அப்பறம், அது ஒரு ஓட்டம் ஓடியது பாருங்க ... தொலை தூரத்தை, நொடி பொழுதில் அடைந்துருக்கும், அவ்வளவு தூரம் உடனே எங்களால் வண்டியில் போக முடியாது


அங்கிருந்து போகும் வழியில் ஒரு சிங்கத்தின் மூன்று குட்டிகளை பார்த்தோம், டிரைவர் சொன்னது, சிங்கம் குட்டிகள் கூட இருக்கும் பொழுது ரொம்ப ஜாக்கிரதையாக இருக்கணும் ... பக்கத்தில் போக கூடாது என்றார். எனவே அங்கிருந்து வேற இடத்துக்கு போனோம், ...போகும் வழியில் ரெண்டு ஒட்டக சிவிங்கி சாலையில்... மெதுவாக அது முள் செடி பக்கம் நகர்ந்து, பெரிய பெரிய முள் உள்ள ( நம்ப ஊர் காகா முள்ன்னு சொல்வாங்க ..வெள்ளையா ரெண்டு மூணு அங்குலம் இருக்கும் ) .. மரத்தில் உள்ள இல்லையை அழகாக சாப்பிட்டது ... அந்த ஒட்டக சிவிங்கி நல்ல உயரம் , நல்ல நிறம் , நல்ல டிசைன் ... சில மணி துளிகளில் வரி குதிரை கூட்டம், அதன் அழகு சொல்ல முடியாது..என்ன ஒரு வரிகள், வெள்ளையும், கருப்பும் - பகலும் இரவும் போல ...

சில நிமிடங்களில் .. குதிரையும் இல்லாமல், காளையும் இல்லாமல் ..ஒரு படைப்பு..அது ஆயர கணக்கில் ... கூட்டம் கூட்டமாக மேய்ந்து கொண்டிருக்கும். மரம் உள்ள இடங்களுக்கு போகும் பொழுது ஆப்ப்ரிகா யானை(களை) பார்த்தோம், ஆஹா நம்ம கணபதி இங்க கூட இருக்காரே ... காது சற்று இல்லே ரொம்ப பெரியது. டிரைவர் எப்போதுமே யானைக்கு அருகில் செல்வதில்லை குறைந்தது ஒரு 20 /30 அடி இருக்கும். ஆனால் சிங்கம் அருகில் ஒரு சில அடிகள் கூட இருக்காது, அவ்வளவு கிட்ட போகலாம். வழியில் ஒரு பெரிய பறவையை பார்த்தோம் அதன் எடை ஒரு 15/20 இருக்கலாம் என்றார் ..அது பறப்பது அதிசயம் தான் ... போகிற வழியில் பெரிய வான் கோழிகள்,
வித விதமான மான்கள், புள்ளி மான், ஒரு மாதிரி மின்னும் ( brownish /golden ) மான்,
மரங்கள் உள்ள இடத்தில் அழகான பறவைகள் ...எல்லா மிருகங்களும் அருகருகில் , அது அது அதன் குடும்பத்துடன் !!!!... இந்த சிங்கம் /சிறுத்தை மட்டும் வேட்டையாடி சாப்பிடும் ... அதனால் நரி கூட்டமும் உண்டு , யப்பா இந்த நரி போடும் சத்தம் இருக்கிறதே, ஒரு மாதிரி இருக்கும். .... அங்குள்ள ஒரு ஆறு போன்ற இடத்தில் நீர்யானை, முதலை ..எல்லாம் அந்த காட்டில், இது போன்ற ஒரு மிருகம் வசிக்கும் இடம் உலகத்தில் வேறு எங்கும் இல்லை என சொல்லலாம் ( டான்செனியா , சவுத் ஆப்ரிக்கா , போன்ற வேறு நாடுகளிலும் இது மாதிரி இடங்கள் உண்டு என்று கேள்வி ) ..

ஒரு நாள் காலை மசாய் மக்கள் வாழும் ஒரு குடிசை வாழ் இடத்திற்கு போனோம், முள்ளை பரப்பி வேலி அமைத்து, அதற்குள் நிறைய குடிசை, உயரமான ஆட்கள், சிவப்பு கம்பளி தான் சுற்றி இருப்பார்கள் , தூரத்தில் இருந்தே அடையாளம் தெரிவதற்கு. அவர்களின் சொத்து மாடுகள் தான், அது தான் கொடுக்கல் வாங்கல் எல்லாம், மாடுகளின் கழுத்தில் ரத்தத்தை எடுத்து பாலுடன் சேர்த்து சாப்பிடுவார்கள் ... வீட்டில் பழைய புகை அடுப்பு தான், சோளத்தில் இருந்து எடுத்த மாவில் ஒரு வித கஞ்சி செய்து உண்கிறார்கள் ... மிகவும் கஷ்டம், ஒரு சாதரண அடிப்படை வசதி கூட கிடையாது... ஆண்கள் எப்போதும் ஒரு வித எலும்பு வைத்திருக்கிறார்கள் ..கை தடி மாதிரி . அவர்களை பார்த்தது ஒரு வித விதயாசமான அனுபவம்

அந்த ரீசார்டை நடத்துபவர் ...ஒரு இந்தியர் தான்னு சொன்னாங்க - நைரோபியில் நிறய இந்தியர் இருப்பதாக கேள்வி , நாங்க மசாய் மாறா மட்டும் பார்த்து விட்டு திரும்பி விட்டோம் - ரிசார்ட்டில் சைவ உணவு கிடைக்கும், ரொட்டி கிடைக்கும். பெரிய பெரிய பணக்காரர்கள் அல்லது இஸ்ரேலில் இருந்து வரும் டூரிஸ்ட்டுகள், பெரும்பாலும் அமெரிக்கர்கள் அல்லது ஐரோப்பியர்கள் தான் வருகிறார்கள்

நான் ஓரளவுக்கு ஊர்கள் ( நாடுகள் ) பார்த்திருக்கிறேன் ... அனால் இந்த பயணம் எப்போதும் மனதை விட்டு அகலாது - மகள் வந்த பிறகு, அவளையும் அழைத்து கொண்டு போனது இன்னமும் சுவாரசியம், இனியும் வாய்ப்பு வந்தால் போக வேண்டும் ..

துபாயில் இருந்து போய் வருவதற்கு அவ்வளவு சிரமம் இல்லை , விமான கட்டணமும் சேர்த்து ஒரு ஆளுக்கு 3000 dirham ஆகலாம். அமேரிக்கா மற்றும் தூர தேச ஆட்கள், இந்தியா வரும் பொழுது நடுவில் ஒரு நாலு நாள் தங்கி இந்த இடத்தை பார்க்கலாம். ...




புதன், 5 ஆகஸ்ட், 2009

மூன்றெழுத்தில் உன்/என் மூச்சிருக்கும் ...STROKE


வணக்கம் அன்பர்களே./நண்பர்களே/



ரத்த அடைப்பு / ஸ்ட்ரோக் ( STROKE) ...



இந்த ஆங்கில வார்த்தையில் (STROKE) , முதல் மூன்று எழுத்தான STR - இதை ஞாபகம் வைத்து கொள்ளுங்கள்.



சிறிது பொறுமையுடன் மெதுவாக / முழுமையாக படியுங்கள்.



ஒரு நரம்பியில் மருத்துவர் ( neurologist ) சொன்னது - மூன்று மணி நேரத்திற்குள் - பாதிப்பு உண்டான நபர் - மருத்துவ மனைக்கு வந்தால் - அவருக்கு சரியான மருத்துவம் மூலம், அந்த பாதிப்பை இல்லாமல் செய்து விடலாம் - முக்கியமான விஷயம், ஒரு நபருக்கு ஸ்ட்ரோக் வந்தது என்று உணர வேண்டும், உடனே, மூன்று மணி நேரத்திற்குள் அவருக்கு சிகிச்சை தொடங்க வேண்டும். - இது கொஞ்சம் கடினமான வேலை



முதலில் ஸ்ட்ரோக் வந்தது என்று உணர வேண்டும்.



முதலில் சொன்ன STR என்ற மூன்று எழுத்துக்களை மறக்காமல் ஞாபகம் இருக்கா ..அதற்காக ஒரு பெரிய நன்றி .



சில /பல சமயம் ஸ்ட்ரோக் வந்தவுடன் யாருக்கும் தெரியாது.... யாரும் கண்டுபிடிக்கவில்லை எனில் பாதிக்கப்பட்ட நபருக்கு - மூளயில் பாதிப்பு ஏற்படும். உயிருக்கே ஆபத்தாக முடியும்



மருத்துவர்கள் சொல்கிறார்கள், அருகில் உள்ள மூன்றாம் நபர் கூட இதை (ஸ்ட்ரோக்) கண்டுபிட்டித்து விடலாம்.



அந்த மூன்று எழுத்துக்களை ... பாருங்கள் STR



S = SMILE , பாதிக்கப்பட்டவரை சிரிக்க சொல்லுங்கள் - புன்னகைக்க சொல்லுங்கள்

T = TALK , அவரை பேச சொல்லுங்கள்

R = RAISE , அவரை இரண்டு கைகளையும் உயர்த்த சொல்லுங்கள்



இந்த மூன்று விஷயங்களில் எதாவது ஒன்றில் திணறினால் கூட அவசர சிகிச்சை என்னை கூப்பிட்டு , பாதிக்கப்பட்டவரின் விவரங்களை கூறி விடுங்கள் - அவருக்கு என்ன நேர்ந்தது என்று மருத்துவமனை அறிதல் மிகவும் முக்கியம்.



இந்த மூன்று கட்டளை அல்லாது , இப்பொழுது ..மேலும் ஒரு சிறிய சோதனை செய்யலாம்



பாதிக்கப்பட்டவரை நாக்கை வெளியே இழுத்து காண்பிக்க சொல்லவேண்டும். நாக்கு குழைந்து இருந்தாலோ , நேராக இல்லாமல் சற்று தாறு மாறாக இருந்தாலோ (If the tongue is 'crooked', if it goes to one side or the other) . மருத்துவரிடம் சொல்ல வேண்டும்



ஒரு இருதய மருத்துவர் சொல்வது - இதில் சொன்னவை நெறைய பேரை சென்றடைந்தால் - பாதிக்கப்பட்டவர் உயிர் பிழைப்பது நிச்சயம்.

மறக்க முடியாத பாபிலோன் ஹோட்டல், பாக்தாத், கர்பலா, ஈராக்.




ஈராக் நினைவுகள்

டெல்லியில் நல்ல வேலையில் இருந்த பொழுது , ஈராக் ஓபிராய் ஹோட்டலில் பணி புரிவதற்காக வாய்ப்பு வந்தது. ( அதிர்ஷ்டம் என்று தான் சொல்ல வேண்டும் )

முதல் முறை வெளிநாட்டு பயணம், எல்லாரிடமும் விடை பெற்று ஏர்இந்தியா விமானத்தில் புறப்பட்டேன், விமான நிலையத்திலேயே, அதிர்ச்சி காத்திருந்தது. வெள்ளைகாரர்கள் எல்லாம் வரிசையில் நிற்கும் போது, என்னை வெளியில் அழைத்து, எல்லா ( அரபி வார்த்தை )- இங்கே வா, வரிசையில் நிற்க வேண்டாம், நீங்கள் வேகமாக இது வழியாக செல்லுங்கள். அது முதல் இன்ப அதிர்ச்சி.

பாக்தாத் நகரம், மிகவும் அழகாக இருந்தது, நிறைய பசுமை , மரங்கள், பெரிய பெரிய கட்டிடங்கள் , மிகவும் பெரிய சதாம் ஹுச்செனின் போட்டோக்கள், நான் பணி செய்யப்போகும் ஹோட்டலுக்கு வந்தோம் ..அதன் பெயர், பாபிலோன் ஓபிராய், டைகிரிஸ் நதிக் கரையில், வாசமும் ஹோட்டலில் தான்.

ஐந்து நட்ச்சத்திர ஹோட்டலில் அறை, 8 வது மாடி, பால்கனி வழியாக டைகிரிஸ் நதி...அது வேறு ஒரு உலகம் ( அது ஒரு கனாக் காலம்!!!! ), தமிழ் எழுதுவது என்பது அம்மாவுக்கு எழுதும் கடிதம் மட்டுமே, டயரி எழுதுவது போன்ற நல்ல பழக்கம் எதுவும் கிடையாது.... அப்படி ஏதாவது எழுதி இருந்தால் நல்லா இருந்துருக்கும். By the rivers of the babylon என்ற Boney M இன் பாட்டுக்கு ஏற்ற அறை ( எனக்கு இங்கிலிஷ்ல தெரிஞ்ச ஒரே ( பாட்டு) வரி !!!!!)


அடுத்த அதிர்ச்சி, அந்த ஹோட்டலில் பணி புரியும் , ஊழியர்களில் பெரும்பாலும் பெண்கள், அதுவும் எங்கள் finance dept இல், முப்பது பேரில் இருபத்து ஐந்து பெண்கள், பெண்கள் அத்தனையும் மனமாகதவர்கள், எல்லாருமே மிகவும் அழகானவர்கள். பொன்னிறம்/ சிவப்பு நிறம், கருமையான கூந்தல், கரு விழிகள் ...என்னை பொருத்த வரை, உலகில் அழகானவர்களின் வரிசையில் முதல் சில இடங்களில் வரக்கூடியவர்கள். ( இதை இன்ப அதிர்ச்சி என்று தான் சொல்ல வேண்டும் )





அந்த பெண்கள் எல்லாரும் நவீன உடை உடுத்தி , நன்றாக அலங்கரித்து கொள்வார்கள், நிறைய பேர் புகை பிடிப்பார்கள் ( இதுவும் ஒரு அதிர்ச்சி தான் ) , நிறைய பேர் கிருத்துவ மதத்தை சேர்ந்தவர்கள் , இது எனக்கு தெரியாத செய்தி

நான் சென்றது ஈரான் - ஈராக் யுத்தம் முடிந்த பின், ஈராக் நிறைய குடிமகன்களை இழந்த நேரம், ஏழெட்டு வருடம் நீடித்த அந்த போர், நிறைய சுவுடுகளை விட்டு சென்றது. அதன் விளைவு தான் திருமணம் ஆகாத அத்தனை பெண்கள், ஓவ்வொரு வீட்டிலும் அந்த யுத்தத்தின் சுவடு தெரியும், அப்பாவோ, சகோதரனோ, உறவினரோ ... இறந்து போயிருப்பார்கள், அல்லது கால் /கை இருக்காது...இப்படி ஏதாவது நடந்தால், ஒரு வருடத்துக்கு அவர்கள் கருப்பு உடை தான் அணிவார்கள், நிறைய பேர் கருப்பு உடையுடன் தான் இருந்தார்கள் என சொல்லவும் வேண்டுமா என்ன?

அடுத்த அதிர்ச்சி, இந்தியன் என்று சொன்னாலே போதும் எதிர் பார்க்க முடியாத மதிப்பு , மரியாதை , இன்முகம் , .... இது கிட்ட தட்ட எல்லா இடங்களிலுமே, விமான நிலையத்தில் நமக்கு தனி மரியாதை, அரசு அலுவகங்களில் கவனிப்பு, இதை எல்லாம் விட டாக்சி டிரைவர் , ஒரு முறை இரு முறை அல்ல, பல முறை , பணம் வாங்க மறுத்துள்ளார், நம்முடைய சினிமா பற்றி பேசுவார்கள், அமிதாப் பச்சன், தர்மேந்தரா, ராஜ் கபூர்... இவர்கள் மிகவும் பிரபலம்.

இந்த மரியாதையும், இன்முகமும் அனுபவித்து பார்த்தால் தான் தெரியும் ... இந்தியாவில் இருந்து வருகிறோம் என்ற ஒரே காரணத்துக்காக, டாக்சி கட்டணம் (டாக்ஸி டிரைவர்கள் எல்லாம் ஈராக் குடிமகன்கள்) கூட வாங்காமல் இருக்கும் ஒரே இடம் ( இருந்த என்றும் சொல்லலாம்) ஈராக் மட்டுமே

யாரோ விளையாடிய சதுரங்க ஆட்டத்தில், ஈராக் தனது குடிமகன்களை pawn ஆக்கி, பெரிய விலை கொடுத்தது. எல்லாவற்றையும் இழந்தது - மற்ற அரேபியா தேசங்களும், அதற்கான சன்மானத்தை கொடுக்கவில்லை என்றே சொல்லவேண்டும். இன்று மற்ற அரேபியா தேசங்கள், பாதுகாப்புடன் இருக்க ஈராக் ஒரே பெரிய தியாகத்தை செய்தது.

இந்தியாவும் மிக தோழமையுடன் தான் உறவு கொண்டிருந்த்து, சதுரங்க ஆட்டத்தில், நாம் ஒரு நல்ல நண்பனை இழந்து விட்டோம்.

ஆனால், அங்கு தங்கிஇருக்கும் போது இது ஒன்றும் தெரியாது (அப்போ உலக அறிவு இல்லை - இப்பொழுது நம் அறிவுக்கு இது எட்டவில்லை )

குழந்தைகள் ஆரோகியமாக, மிக அழகாக இருப்பார்கள்... படிப்பு, புத்தகம் எல்லாமே இலவசம் என கேள்வி, எனக்கு தெரிந்த வரை ( இன்னும் ஒரு முறை கூறி கொள்கிறேன் ) எனக்கு தெரிந்த வரை - சதாம் தன மக்களை நன்றாகவே கவனித்து வந்தார், உணவு , உடை போன்றவை அந்த யுத்தம் முடிந்து, நலிவடைந்த போதிலும், ஓரளவுக்கு எல்லாருக்கும் எல்லாம் கிடைத்தது, புது புது கார்களை பார்க்க முடியாது, இது போன்ற சின்ன சின்ன குறைகள் தான்

ஆனால் அவர் தயவு தாட்ச்ச்சன்யம் பார்க்க மாட்டார் ஏதாவது ஒன்று என்றால் அந்த குடும்பத்தையே வேரோடு அறுத்து விடுவார் - அப்படி தான் அவர் மச்சான் திடீரென்று விமான விபத்தில் மாண்டார். அவருடைய மகன் உதய் எங்கள் ஹோட்டலுக்கு அடிக்கடி வருவார் - நானே பார்த்திருக்கிறேன் - வெள்ளை உடையில் தான் இருப்பார்.

சதாம் சுருட்டு வைத்து கொண்டு ஒரு போட்டோ இருக்கும், ரொம்ப கம்பீரமாக இருப்பார், அவர் புரட்சியால் ஆட்சியை பிடித்தவர், குளிர் காலத்தில், டைகிரிஸ் நதியை நீஞ்சி தப்பித்து ஓடினார் என்று கேள்வி.





எங்கள் ஹோடலேயே ஒரு பாரில் gambling உண்டு, பெரிய பெரிய பணக்காரர்கள் பெரிய பையில் பணமுடன் வந்து விளையாடுவார்கள். ஒரே புகை மூட்டமும், மதுவும் நிறைய இருக்கும். சினிமாவில் மட்டுமே பார்த்த அந்த வகை காட்ச்சிகள், நிறைய பார்த்தேன் .

ஈராக்கில் நிறைய ஹிந்தி சினிமாக்கள் பார்த்திருக்கிறோம், பாக்தாத்தின் தட்ப வெப்பமும், டெல்லி போல தான் இருக்கும், நல்ல குளிரில் ஐஸ்க்ரீம் சாப்பிடுவது தனி ருசி, நிறைய பார்கள் உண்டு...அங்கு ஒரு சர்ச்சில் கல்யாணம் பார்த்த அனுபவம் உண்டு ( ஆம் பாக்தாதில் சர்ச் உண்டு )... ஈராக்கில் குருநானக் நிறுவிய ஒரு குருத்துவாரா உண்டு... இரண்டாம் உலக போரில் பங்கேற்ற நிறைய இந்திய சிப்பாய்கள் , திரும்பவும் நம் நாடு வர முடியாமல் இங்கேயே தங்கி விட்டனர், பின் கல்யாணம் , குடும்பம் எல்லாம் இங்கே தான்

ஒரு முறை தொங்கு தோட்டத்தில் எல்லா நாடுகளும் பங்கு கொண்ட ஒரு விழாவுக்கு போன நினைவு உண்டு, இந்தியாவில் அகமதாபாத்தில் இருந்து ஒரே கலை குழு வந்திருந்தது, அதில் சில தமிழ்ர்களும் அடங்கும்.




எங்கள் ஹோட்டலில் அடிக்கடி திருமணம் நடக்கும், அவர்கள் திருமணம் - முதலில் ஒரு ஐந்து அல்லது ஆறு அடுக்கு கேக் வரும், அதன் உயரம் சுமார் ஒரு 6 அடி இருக்கும், ஒரு மூன்று பேர் உள்ள இசை குழு இருக்கும் - ஒரு கீ போர்டு, ஒரு ரிதம் பாக்ஸ், ஒரு கிடார் அல்லது அரபிக் வாத்யம், அவ்வளவு தான் ..சும்மா மூன்று மணி நேரத்திற்கு பூந்து விளையாடுவார்கள் , இரைச்சல் கொஞ்சம் ஜாஸ்தி தான், ஆனால் , எல்லாரும் கலந்து கொண்டு, அவர்களின் பாட்டுக்கு நடனம் ஆடுவார்கள், அவர்களின் நடனம் மிக மிக நன்றாக இருக்கும் , அது ஒரு கிராமிய நடனம் போல / கரக ஆட்டம் போல இருக்கும் ... சல்சா, ட்விஸ்ட், ராக் போன்ற நடனங்களின் கலவை ...போர் முடிந்த காலம் என்பதால் நிறைய திருமணம் நடக்கும் .... பாவம் அவர்களின் கனவு எல்லாம் என்ன ஆயிருக்கும் ( குவைத் போர், பின் அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு ...) உலகம் அந்த தேசத்தை சின்னா பின்னமாக்கி விட்டது என்று தான் சொல்ல வேண்டும்

அங்கு இருந்த பொழுது கர்பலாவுக்கு போயிருந்தோம், அந்த ஊரே ஒரு சுடுகாடு போல் தான் தோன்றியது, ஊருக்குள் நுழையும் போதே நிறைய கல்லறை தெரியும், பெரிய கட்டில் போன்ற ஒன்றில், அடக்கம் செய்வதற்கு கொண்டுவரப்பட்ட உடல்களை பார்த்து கொண்டே அந்த தொழும் இடத்திற்கு போனோம் , அங்கு நபிகள் பெருமானின் மருமகன் கொலையுண்ட இடத்தை பார்த்தோம் . அந்த ஊருக்குள் நுழைந்து வெளிவரும் வரை , ஒரு மாதிரி மனம் சில்லிட்டு தான் போயிருந்தது . மறக்க முடியாத ஒரு இடம்








இதன் நடுவில் ஒரு முறை இந்தியா ( துபாய் வழியாக ) வந்தேன் , துபாய் ஏர்போர்ட் மட்டும் தான் பார்த்தேன் , திரும்பி வரும் பொழுது ஒரு கிரேட் இந்தியன் ரம் வாங்கிவந்தேன்... மறுபடியும் இந்தியன் என்பதால் எந்த கெடுபிடியும் கிடையாது, கொஞ்ச நாளைக்கு ராஜ உபச்சாரம் தான், நண்பர்களிடம், என்னிடம் ரம் இருந்ததால்

ஒரு வருடம் தான் அங்கு இருந்தேன் ... , திரும்பவும் டெல்லி வரவேண்டியதாயிற்று, நான் திரும்பி வந்த கொஞ்ச நாட்களிலேயே திரும்பவும் குவைத் யுத்தம் , பின் நிறைய வருடங்கள் UN Sanctions - பின் அமெரிக்கா படைஎடுப்பு, உள் நாட்டுக் கலகம், அந்த நாட்டை எல்லாரும் சேர்ந்து ஒரு வழி பண்ணியாச்சு.

மறக்க முடியாத பாபிலோன் ஹோட்டல், பாக்தாத், கர்பலா, ஈராக்.

திங்கள், 3 ஆகஸ்ட், 2009

நில் , கவனி ...

இது நடந்தது அமேரிக்காவில், இப்போது நடந்து முடிந்த தேர்தலில் " YES WE CAN" என்று சொன்ன ஒபாமாவை ஜனாதிபதியாக தேர்ந்தெடுத்த அமேரிக்காவில்.

ஒரு மனிதன் , வயலினில் அருமையான ஆறு மேற்கிந்திய ( claasical compositions ) இசையை , வாஷிங்டன் ரயில் நிலையத்தில், காலை நேரத்தில், குளிர் காலத்தில், ஜனவரி மாதத்தில்... வாசித்து கொண்டிருந்தார் .

மூன்று நிமடத்துக்கு பிறகு , ஒரு நடு வயது ஆண் , யாரோ வயலின் வாசிப்பதை பார்க்கிறார். அவர் நடையின் வேகத்தை குறைக்கிறார், சில வினாடிகள் நின்று, பின் வேகமாக நடையை தொடர்கிறார்.

நான்கு நிமிடம் கழித்து, வயலின் வாசிப்பவர்க்கு அவருடைய முதல் டாலர் கிடைக்கிறது, ஒரு பெண்மணி அந்த பணத்தை வேகமாக வீசி எறிகிறார், நிற்காமலே
வேகமாக நடந்து போகிறார்.

ஆறு நிமிடம் கழித்து, ஒரு வாலிபன் சுவரில் சாய்ந்து நின்று கொண்டு, வயலின் இசையை கேட்கிறார், சிறுது நேரத்திலேயே தன்னுடைய கடிகாரத்தை பார்க்கிறார், உடனே வேகமாக நடந்து போகிறார்.

பத்து நிமிடம் கழித்து ஒரு மூன்று வயது பையன் நிற்கிறான், ஆனால் அவனுடைய அம்மா அவனை இழுத்து கொண்டு ஓடுகிறார். அந்த பையன் திரும்பவும் நிற்க முயற்சிக்கிறான் , அம்மா இம்முறை கொஞ்சம் பலமாக இழுத்து கொண்டு போகிறார், அந்த பையன் தலையை திருப்பி கொண்டே நடக்கிறான்

ஓவொரு முறையும் ஏதாவது குழ்ந்தை பார்க்கும் பொழுது, அவர்களின் பெற்றோர்கள் பலமாக இழுத்து கொண்டு போகிறார்கள்.

அந்த மனிதர் வாசிக்க ஆர்ரம்பித்து முக்கால் மணி நேரம் ஆகி விட்டது, இது வரை ஆறு பேர்கள் மட்டுமே கொஞ்ச நேரத்திற்கு வாசித்தார்கள்

ஒரு இருபது பேர்கள் காசு கொடுத்திருந்தார்கள் ( போட்டார்கள் !!!) , மொத்தமாக $ 32 வந்திருந்தது ( தோரயமாக Rs 1,500)

யாருமே அவ்வளவாக கவனிக்க வில்லை , அந்த வயலின் வாசிப்பவரும் ஒரு மணி நேரம் வாசித்தாகி விட்டது. ஒரு கை தட்டலும் கிடைக்கவில்லை, பாராட்டும் இல்லை

யாருக்குமே தெரியவில்லை, வயலின் வாசிப்பது Mr. Joshua Bell ( திரு. ஜோஷ்வா பெல் ) , உலகத்திலேயே மிக சிறந்த வயலின் மேதை.






அவர் வாசித்தது , மிக சிறந்த இசை கோப்புகள், அதற்க்கு அவர் பயன் படித்தியது மிக சிறந்த வயலின் ( அதன் விலை மட்டும் $ 3.5 மில்லியன் )

இரண்டு நாட்கள் முன் , திரு.பெல் அவர்கள் , பாஸ்டன் நகரில் , அரங்கு நிறைந்த மக்களுக்கு வாசித்தார், அதற்கான நுழைவு கட்டணம் சராசரியாக $ 100.

The Washington Post என்ற பிரபல தின பத்திரிக்கை, இந்த மாதிரி ஒரு பரிசோதனை செய்வதற்காக, அதாவது, ஒரு பொது இடத்தில், சரியான சமயம் இல்லாத பொழுது, நாம் எப்படி ஒரு அழகை ரசிக்கிறோம், / உள் வாங்கி கொள்கிறோம் , எதிர்பாராத இடத்தில் எப்படி திறமையை கண்டு கொள்கிறோம் - என்று பார்பதற்காக.

இந்த பரிசோதனையை நடத்தியவர்கள் ஒரே ஒரு முடிவுக்கு தான் வர முடிந்தது. அழகாக எழுதப்பட்ட இசை, வாசிப்பது உலக புகழ் பெற்ற மேதை, அதை வாசிப்பதற்கு மிக உயர்ந்த அதி நவீனமான கருவி , இவை எதுவுமே நம்முடைய கவனத்தை கவர வில்லையெனில் , நாம் எத்தனை அழகான விஷயங்களை பார்க்காமலே / கேட்காமலே இழக்கிறோம்




இங்கு கிளிக்.... இதை பார்க்க

ஞாயிறு, 26 ஜூலை, 2009

நினைவுகள் -8



இப்படி இருந்த நான் ...
 
Posted by Picasa


எப்படி ஆயிட்டேன்

நான் இது வரை ஒரு உதவாக்கரை போல் இருந்ததாலும், ( உதவாக்கரை போல் அல்ல, நிஜமாகவே உதவா கரை தான் )- அம்மா திருச்சியை விட்டு, சின்ன அண்ணாவுடன் டெல்லி சென்றதாலும், நான் எங்கே இருக்க வேண்டும் என்ற கேள்வி எழுந்தது.

நான் வீட்டுக்கு வெளியில், எவ்வளவு தான் பீலா விட்டாலும், அம்மா இல்லை என்றால் நான் அவ்வளவு தான், சாதம் தனியாக பிசைந்து சாப்பிட கூடத் தெரியாது, இது கிட்ட தட்ட ஸ்கூல் முடிக்கும் வரை, கொஞ்ச நாள் p.u.c யிலும் தொடர்ந்தது.

நான் கடைசி பிள்ளை என்பதாலும், அந்த கால கட்டங்களில், எனக்கு முன்பு பிறந்த ஒரு நான்கு குழைந்தைகள் இறந்து ( அம்மா இழந்து ) விட்டதாலும் , அம்மாவின் அரவனைப்பு எனக்கு கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. ... எனவே நான் ஒழுங்கா சாப்பிட்டு வள்ரும்னனா டெல்லியில் படிக்கணும் என்று பிளான், . எனக்கு தான் திருச்சில ஆப்பு வைச்சாச்சே , எப்படியோ அதை இதை சொல்லி, டெல்லில காலேஜ் சீட் கிடைக்கிலைன்னு சொல்லிட்டு, திருச்சி திரும்பினேன். அப்ப தான் கல்யாணராமன் டிரைலர் வந்த சமயம், அதே பானியில " திரும்ப வருகிறான் சுந்தர ராமன்" ன்னு ஒரு கார்டு வரைந்து காலேஜ்க்கு அனுப்பினேன்...ஹி , ஹி ...ஹீரோயின் பேர் சஸ்பென்ஸ்ல விட்டுட்டேன் !!!!!டெல்லியில் இருந்து திரும்பி வந்தது - ஒரு North Star ஷூவுடன் + Wanted ஜீன்ஸ் போட்டுக்கிட்டு அலம்பல் பண்ணிநோமில்ல

ஒரு சுபயோக சுப தினத்தில் நானும் B.A படிக்க தொடங்கினேன். அம்மாவும் இல்லை, அண்ணாவின் பேச்சும் கேட்கறது கிடையாது, நிலைமை முற்றியது , அம்மா எதற்கோ திருச்சி வந்த பொழுது, நான் தனியாக இருக்க வேண்டும் என்று முடிவாகியது... நேர போஜி வீட்டுக்கு போனேன்,

அவங்க வீடு ஒரு அக்க்ஷய பாத்ரம் மாதிரி, சின்ன சர்வெண்ட் குவார்ட்டர்ஸ் ல தான் இருந்தாங்க - பக்கத்ல கார் shed . நான் சாப்பாடு வெளியில், அம்மா மாதம் 150 ருபாய் அனுப்ப வேண்டும். போஜி அம்மா பெரிய பெரிய மேனேஜர் வீடுகளில் வேலை செய்தார்கள், பெரியம்மா ,மற்றும் சின்னம்மாவும் அப்படியே, அது தவிர சில உறவினர்கள். தினம் இரவு ( மட்டும்) சமைப்பார்கள், எப்படியோ, தினமும் ஒரு ரெண்டு /மூன்று பேர் புதிதாக சாப்பிட வருவார்கள்... அவர்கள் வீட்டில் தான் என்ன ஒரு தாராள மனசு, எல்லாருக்கும் உணவு உண்டு, அவர்களின் நல்ல மனசுக்கு, இப்போது எல்லாரும் நன்கு இருகிறார்கள் - இப்பவும் விடுமுறையில் அடிக்கடி பார்ப்பதுண்டு

என்னுடைய சாப்பாடு அமுதம் கான்டீனில். மணி ஆர்டர் வந்தவுடன் எல்லாரும் என்னிடம் கடன், நிறய கொடுக்கல் வாங்கல் ... அப்பல்லாம் சாப்பாடு 1.ருபாய் 25 காசு தான். ...முதல் பத்து நாட்களுக்கு , தோசை, ரோஸ்ட், பூரி, சில சமயம் சோன்பப்படி..அடுத்த பத்து நாள் இட்லி, புல் மீல்... கடைசி ஒரு ஐந்து நாள், இட்லி, இட்லி,...கடைசி ரெண்டு நாள், பன், பழம், நிறய தண்ணி - ஒரு நாள் ஒன்னும் கிடையாது,...

அந்த வீட்டில் இருக்கும் பொழுது, என் அண்ணா பையன் ராகவன் அப்படிதான் ஸ்கூலுக்கு போகனும் - (ஒண்ணாம் / ரெண்டாம் வகுப்பு) , சித்தப்பா காசு அப்படின்னு கேட்ப்பான். நான் இல்லாத பொழுது, எங்க சித்தப்பா காசு வ்ச்ருப்பார்
எடுத்து குடுங்கன்னு உரிமையோட கேட்ப்பான்.

சாதம் பிசைந்து , ரெடியாக கிடைத்த கால கட்டத்தில் இருந்து, ஒரு உடனடி மாற்றம், தனியாக எல்லாவற்றையும் செய்ய வேண்டும், துணி துவைக்க வேண்டும், அதை சரியாக உலர வைக்க வேண்டும், பின் அதை மடித்து வைக்க வேண்டும், படித்த படுக்கையை மடித்து வைக்க வேண்டும் .... இதில்லாம் ஒரு சாதரண ஜோலி தான், ஆனா எனக்கு, அந்த சமயத்தில் ... சின்னம்மாவிடம் எப்பொழுதும் திட்டு தான்.

காலேஜ்ல, ஒரே கலாட்டா தான் - காரணம் இல்லாமல் மகிழ்ச்சி, சிரிப்பு, ஆனந்தம். பேராசிரியர்கள் நன்றாக நடத்தும் பாடம், புதிய பாடங்கள், Peter Drucker போன்ற மேதைகள் உண்டாக்கிய management principles - எல்லாம் மிக சுவாரசியமாக இருந்தது. கனமான பெரிய புத்தகங்கள், மெதுவாக மனதுக்குள் நுழைந்தது.

கையில ....கொண்டை, அவுந்திடிச்சு ... அப்படியும், விடுவோமா ... அதை கையில வெச்சே , பேசிட்டோமில்ல



ஒரு நாடகத்தில் ( கீரை கிண்டிய கிட்டபொம்மன் )


என் பக்கத்ல ஐயரு மாத்ரி இருக்கறது பாப்டிஸ்ட் டி மில்லோ!!!!!.








அந்த சின்ன வீட்டில் நிறைய ஆட்கள் ஆனதால், நானும் அசோக்கும் ஒரு கார் ஷெட்டுக்கு மாறினோம். ஒரு நாள், திரு செல்வராஜ் மாலை வந்து சந்திக்கிறேன்னு
சொல்லிஇருந்தார். பக்கத்து வீட்டின் பின் புறம், அந்த வீட்டில் வேலை செய்யும் ஒரு பெண் குளித்து கொண்டிருந்தது - எனக்கு என்னோவோ ஜீனத் அமன் போல தெரிந்தது, அவளை அழைத்தேன், அந்தப் பெண் தமிழ் ஒரு மாதரியாக இழுத்து பேசியது, என்னுடைய வீட்டிலும் யாரும் இல்லை, அந்த பெண் கார் ஷெட்டுக்கு வந்தது, நான் ஒரு துண்டு மட்டும் கட்டி இருக்கேன், வாயிலில் நின்று கொண்டு , ஏன் கூப்பிட்ட.... ஒன்னும் இல்லை சும்மா தான்னு - நான். அந்த ஒரு நொடித் துளிகளில் என்னை இழந்திருக்கலாம் - என்னை சுதாரித்து கொண்டேன், அந்த பெண்ணும் எதற்கும் முன்பே வாயிலில் இருந்து ஓடி விட்டது. -

திரு செல்வராஜை பார்க்கப் போகிறோம் என்ற நினைப்பும், இப்படி எல்லாம் நடந்து கொண்டால் நம்ம ஆள் நம்மை பற்றி என்ன நினைக்க கூடும் என்ற பயமும், என்னுடைய நலன் கருதும், அம்மாவின் ஆசிர்வாததாலும் - ஒரு பெரிய இக்கட்டில் இருந்து கடவுளும் காப்பாற்றினார்.

புதிய மாணவர்களை, கவிதை எல்லாம் எழுதி, நோட்டீஸ் வினியோகித்து வரவேற்றோம். எல்லாம் ஒரு காரணத்துக்காக - கல்லூரி தேர்தல். டவுன்ல போய் போஸ்டர் எல்லாம் அடித்தோம், ரோட்டுல எழுதினோம் , ரெண்டு குழு உண்டாகியது - அடி தடி உண்டாவதற்கான எல்லா சாத்திய கூறுகளும் இருந்தது... எதிர் குழுவில், தஞ்சாவூர்ல இருந்து வந்த காட்டான்கள், நாங்களோ, டவுன்ஷிப்ள வளர்ந்த பாலிஷ்டு மக்கள். ஒரு நாளைக்கு, கூத்தைப்பார்ல இருந்து, ஒரு 8/10 - மாடு / ஆடு மேயப்பவர்களை காலேஜை சுற்றி நிறிததினோம்.-(திருமூர்த்தி உபயம் ) நிலைமை மோசமாகி கொண்டே போனது, - காம்ப்ரமைச்சுக்காக யார் யாரோ தலைவரை போய் பார்த்தோம். தொகுதி MLA அண்ணாதாசனை பார்க்கப் போனோம்- மனுஷன் காலங் கார்த்தால தூங்கி எழுந்த்ருக்கும் போதே சாராயம். ( கொஞ்ச நாட்களில் இறந்தும் போனார் ) - ஒன்றும் நடக்க வில்லை. எங்கள் ப்ரொபசர் திரு செல்வராஜ் மாற்றி அடிக்கப்பட்டார். ( டிரான்ஸ்பர் ).

எங்களோட ஒருமித்த கனவு கன்னி ஸ்ரீ தேவி , கொஞ்சம் ஸ்ரீ பிரியா, சரிதா , சுஜாதா, ஜெயசித்ரா அப்பறம் கவர்ச்சிக்கு சுமலதா , பிரமீளா, ஒய்.விஜயா போன்ற சைடு டிஷும் உண்டு, உதிரி பூக்கள் அஸ்வினியை கூட பிடிக்கும். காமிரா மேன் , கர்னனின் ஜம்பு ரொம்ப பிரபலம் அப்போ, அதை பார்க்க போனப்ப எனக்கு தெரிந்த பெண்ணின் அப்பாவும் வரிசையில் நின்றார்.. கமல் ரஜனி வாக்கு வாதங்களின் உச்சகட்டம் அப்போது, நான் சாமர்த்தியமா ரெண்டு கும்பல்லயும் உண்டு.

அந்த கால கட்டங்களில் இளையராஜாவின் இசை, வைரமுத்துவின் வரிகள், எங்களின் மன நிலை, எல்லாமாக சேர்ந்து அந்த இசையை கொண்டாடியது. அப்பொழுது வாக் மென் , ஐபாட், பெரிய மியூசிக் சிஸ்டம் ஒன்றும் கிடையாது. ரேடியோ, டைலர் கடை, டீகடை, இங்கு கேட்ட பாடல்கள் தான், ... நீல வான ஓடையில் மிதந்து கொண்டு ஆயரம் தாமரை மொட்டுக்களை பாய்ச்சியது, கருவாட்டுகூடை கூட மனத்தது. - அது ஒரு கனா காலம் என் கண்மணி.


நினைவுகள் பதிந்தது


நினைவுகள் - 7
நினைவுகள் - 6
நினைவுகள் - 5
நினைவுகள் - 4
நினைவுகள் - 3
நினைவுகள் - 2
நினைவுகள்-1

சனி, 25 ஜூலை, 2009

தர்பூஸ் பழமும் , முட்டை ஓடும்

சில பேர்களுக்கு நல்ல திறமை உள்ளது, அதோட அவர்களின் கற்பனை திறனும் சேர்ந்தால்... இது தான்...நீங்கள் இந்த குளுர்ச்சியான தர்பூஸ் பழங்களை பார்த்தே மனம் குளிர்வது நிச்சயம்.... கொஞ்சம் கிழே , முட்டையில்... அதை நீங்களே பாருங்க


















இந்த முட்டை ஓடுகள், ஒரு அதி நவீனமான ( HIGH PRECISION LATHE ) பட்டறையில் . லேசர் பீம்களின் உதிவியோடு ( லேசர் பீமனா... ஒளி கற்றையா) ..என்னவெல்லாம் படைக்க முடிகிறது ... இந்த லேசர் பீமின் உதவி கொண்டு தான், கண்களில் சிகிச்சை செய்ய பெரிதும் உதவுகிறது....கண்டுபிடிப்புகள் வியக்க தக்கது தான்,











'A true friend is someone who knows you're
a good egg even if you're a little cracked
.